மகாராஷ்டிரத்தில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள கையுறைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், 6 தொழிலாளர்களில் உடலை மீட்டுள்ளனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தின் போது 10-15 தொழிலாளர்கள் கட்டிடத்திற்குள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், அவர்களில் சிலர் விபத்தில் சிக்கிக்கொண்டதாகவும் தொழிலாளர்களில் ஒருவர் கூறினார். இந்த நிலையில், தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.