states

img

மகாராஷ்டிராவில் இறுதியான இந்தியா கூட்டணி!

48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.

இந்தியா கூட்டணி வெற்றிகரமாக பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீட்டை உறுதியாக்கி வருகிறது.

25 மக்களவைத் தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ்-22, சிபிஎம்-1, ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி-1, பாரதிய ஆதிவாசி கட்சி-1 என்கிற எண்ணிக்கை அடிப்படையில் நேற்று தொகுதி பங்கீடு உறுதியானது.

இந்நிலையில், இன்று  48 தொகுதிகளை மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ் தாக்கரே பிரிவு)-21, காங்கிரஸ்-17, தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் பிரிவு)- 10 என்ற எண்ணிக்கை அடிப்படையில் தொகுதி பங்கீடு உறுதியாகியுள்ளது.

இந்தியா கூட்டணி ஆரம்பித்த போது, இந்த கூட்டணி தேர்தலுக்கு முன்பாகவே கலைந்து போய்விடும், கூட்டணிக்குள் ஒற்றுமையில்லை என்று தொடர்ந்து பா.ஜ.க-வினர் விமர்சித்து வந்த நிலையில், இந்தியா முழுவதும் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களில் இந்தியா கூட்டணி வெற்றிகரமாக கூட்டணி அமைப்பது தற்போது பாஜகவிற்கு களக்கத்தை ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெல்லும் என மோடி வெற்று முழக்கமாக முழங்கி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பாஜகவிற்கு சரவர கூட்டணி அமையாமல் இருப்பதால் பாஜகவினருக்கு தோல்வி பயம் அதிகரித்துள்ளது.