மகாராஷ்டிராவின் நான்டெட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ளது ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை நேற்று 24 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 71 பேர் மிகவும் மோசமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த உயிரிழப்புக்கு மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை மறுத்தஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையின் டீன் ஷியாம் ராவ் வகோடே, நோயாளிகள் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்துள்ளார். இதை அடுத்து, மருத்துவமனையில் தொடர் உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த தொடர் உயிரிழப்பு சம்பவத்தை அடுத்து எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறன.