மும்பையில் நடிகர் ரன்பீர் கபூர் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரன்பீர் கபூர் - ஷ்ரத்தா கபூர் நடிப்பில் ஹிந்தி திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள சித்திரகூட் படப்பிடிப்பு தளத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து இரவு 10.30 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தீ விபத்தினால் படப்பிடிப்பு தளம் முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்தது. இந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. வருகிற 2023 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.