மகாராஷ்டிரா தலைநகர் மும்பை யின் லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் இடத்திற்கு மேல் தளத்தில் உள்ளது “ஜன் ஆஹார்” உணவகம். இந்த உணவகத்தின் சமையற்கூடத்தில் புதனன்று மதியம் 2:45 மணியளவில் திடீரென தீ விபத்து நிகழ்ந்தது. சுமார் ஒரு மணி நேரம் போராடி 3:45 மணியள வில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைவாக வந்து தீயை அணைத்ததாலும், முன்பதிவு செய் யும் இடத்திலிருந்தும், அறிவிப்பு தரும் இடத்திலிருந்தும் பணியாளர்கள் விரைந்து வெளியேற்றப்பட்டதாலும், முதல் நடைமேடையில் பயணிகள் யாரும் இல்லாததாலும், ரயில் நடை பாதையில் தீ மேற்கொண்டு பரவாததா லும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் லோக்மான்ய திலக் ரயில் நிலையம் தீக்கிரையாகி இருக்கும். இச்சம்பவத்தால் ரயில்கள் நிலையத்துக் குள் வருவதிலும் புறப்படுவதிலும் 2 மணி நேர கால தாமதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.