states

ஆதார் அட்டை கொடுமைக்கு பலியான மூன்று உயிர்கள்

பெங்களூரு, நவ.5- ஆதார் அட்டை இல்லாததால் தாய், அவரது இரண்டு  குழந்தைகள் என மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி (35). இவர் ஒரு மாதத்திற்கு முன்பு கர்நாடகா மாநிலம் தும்கூருக்குச் சென்றார். தனது ஆறு வயது மகளுடன் பாரதிநகரில் வசித்து வந்தார். அந்தப் பெண்ணுக்கு நவம்பர் 2-ஆம்  தேதி இரவு பிரசவ வலி ஏற்பட்டதால், அக்கம்பக்கத்தி னரின் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனை மருத்துவர்கள் அவரிடம் ஆதார்  அட்டை மற்றும் தாய்-சேய் (தாய்) அட்டை வேண்டு மெனக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அவரிடம் இரண்டு  அட்டைகளும் இல்லாததால் அனுமதிக்க மறுத்து, பெங்க ளூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்குச் செல் லும்படி கூறியுள்ளனர். அந்தப் பெண்ணிடம் பெங்களூருக்குச் செல்ல பணம் இல்லாததால், அவர் தனது வீட்டிற்குத் வந்துவிட்டார், நவம்பர் 3-ஆம் தேதி அதிகாலையில் இரண்டு குழந்தை களைப் பெற்றெடுத்தார். இருப்பினும், முதல் குழந்தை  பிறந்தவுடன் அவருக்கு ரத்தப்போக்கு அதிகரித்துள்ளது. மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் இரண்டாவது குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் அவர்  உயிரிழந்தார். அவருக்கு பிறந்த இரண்டு குழந்தை களும் உயிரிழந்தன.  இந்த சம்பவம் தொடர்பாக மகப்பேறு மருத்துவர் டாக்டர் உஷா, மருத்துமனை பணியாளர்கள், செவிலி யர்கள் யசோதா, பி.ஒய். சவிதா, திவ்ய பாரதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.