136 இடங்களைப் பெற்று காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி
பெங்களூரு, மே 13 - கர்நாடக சட்டப்பேரவைத் தேர்த லில், கருத்துக் கணிப்புக்களையும் தாண்டி பாஜக படுதோல்வியை சந் தித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 136 இடங்களை வென்றுள் ளது. பாஜக 65 இடங்களிலும், மதச் சார்பற்ற ஜனதாதளம் 19 இடங்களி லும் வெற்றிபெற்றுள்ளன. சுயேட்சை கள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ள னர். இந்தியா டுடே - ஆக்சிஸ் இந்தியா, டைம்ஸ் நவ் - இ.டி.ஜி, ஏபீபி நியூஸ் - சி வோட்டர், இந்தியா டி - சி.என்.எக்ஸ் ஆகியவற்றின் கருத்துக் கணிப்புக் களைத் தவிர்த்து, பெரும்பாலான பாஜக ஆதரவு ஊடகங்களின் கருத்துக் கணிப்புக்கள் கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவையே அமையும். யாருக் கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறியிருந்தன. இந்நிலையில், அந்த கணிப்புக்களை பொய்யாக்கி, காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. பாஜக தோற்றுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் அறுதிப் பெரும்பான்மைக்கு 113 இடங் கள் போதுமானது என்ற நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையைக் காட்டிலும் 23 இடங்களை காங்கிரஸ் கட்சி கூடுதலாக பெற்றுள்ளது. இதன்மூலம் கர்நாட கத்தில் ஆட்சியமைப்பதில் காங்கிர சுக்கு எந்த சிக்கலும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு, கடந்த மே 10 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் 73.19 சதவிகித வாக்குகள் பதிவாகின. ஒரு கோடியே 96 லட்சத்து 58 ஆயிரத்து 398 ஆண் வாக்காளர்கள், ஒரு கோடியே 91 லட்சத்து 92 ஆயிரத்து 372 பெண் வாக்காளர்கள், ஆயிரத்து 37 மூன்றாம் பாலினத்தவர் என 3 கோடியே 88 லட்சத்து 51 ஆயிரத்து 807 வாக்குகளை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள், பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் 36 மையங்களில் எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், துவக்கம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை பெறத் துவங்கியது. பிற்பகல் 12 மணிக்கு உள் ளாகவே காங்கிரஸ் கட்சி பெரும்பான் மைக்குத் தேவையான எண்ணிக்கை யை தாண்டியது. அடுத்தடுத்த சுற்று களிலும் முன்னிலையைத் தக்கவைத்த காங்கிரஸ் கட்சி, 136 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆளும் பாஜக 65 தொகுதிகளை மட்டும் பெற்று தோல்வி அடைந்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்த லையொட்டி, 15 நாட்களுக்கும் மேலாக அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சா ரத்தில் ஈடுபட்டன. காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, சித்தராமையா உள்ளிட்டோரும், பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி. முதல்வர் ஆதித்யநாத், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோரும் தீவிரப் பிரச்சா ரம் செய்தனர். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகத்திலேயே தங்கி, வாரக் கணக்கில் பிரச்சாரம் மேற்கொண்டார். வாக்குகளைக் கவர்வதற்காக பாஜக தரப்பில் கோடிக்கணக்கான பணம் வாரியிறைக்கப்பட்டது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, ராமரையும், அனுமனையும் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கான கருவிகளாக மாற்றி, அப்பட்டமாக மதப்பிரச்சாரத்தை கையி லெடுத்தார். பஜ்ரங் தள், விஎச்பி அமைப்புக்கள் மூலமும் மதவெறி தூண்டிவிடப்பட்டது. ஆனால், பாஜக-வின் அனைத்து தந்திரங்களையும் முறியடித்து அக்கட்சி யை கர்நாடக மக்கள் முறியடித்துள்ள னர்.