states

சிறையில் சொகுசு வசதிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: சசிகலாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

பெங்களூரு, மார்ச் 11 - சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் நிறைவடைந்ததை அவர் கள் மூவரும் விடுதலையாகி விட்டனர்.   இதற்கிடையே சசிகலா சிறையில் இருந்தபோது அவருக்கு சட்ட விதிமுறை களை மீறி சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருந்ததை சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா அம்பலப்படுத்தினார். சொகுசு வசதிகளை பெற சசிகலா ரூ.2  கோடியை லஞ்சமாக சிறைத்துறை அதிகாரி களுக்கு வழங்கியதை  விசாரணைக்குழுவும் உறுதி செய்தது. இதையடுத்து கர்நாடக ஊழல் தடுப்பு படையினர் சசிகலா மீது கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.  இந்நிலையில் மாரச் 11 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில்  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சசிகலா உள்ளிட்ட 6 பேரும் நேரில் ஆஜராகினர். தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என சசி கலா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது நீதிபதி, இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுவிட்டதால், இதில் முன்ஜாமீன் வழங்க  முடியாது என்றும், 5 லட்ச ரூபாய்க்கான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து நிபந்தனை முன்ஜாமின் பெற்றுக்கொள்ள லாம் என்றும் தெரிவித்தார். இதையடுத்து சசிகலா தரப்பு வழக்கறிஞர், 5 லட்ச ரூபாய்க்கான வரை வோலையை தயார் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததையடுத்து, சசிகலா இளவரசிக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16 ஆம் தேதி சசிகலா மற்றும் இளவரசி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.