பெங்களூரு, டிச. 31 - கர்நாடக மாநிலத்தில் நடை பெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லில் ஆளும் பாஜக படுதோல்வி அடைந் துள்ளது. பாஜக-வை விடவும் அதிக மான இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவில் பதவிக்காலம் முடி வடைந்த 5 சிட்டி முனிசிபல் கவுன்சில் கள், 19 நகர முனிசிபல் கவுன்சில் கள், 34 டவுன் பஞ்சாயத்துக்கள், இவை தவிர, 57 கிராமப் பஞ்சாயத்துக் களுக்கு கடந்த டிசம்பர் 27 அன்று தேர்தல் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 1185 வார்டுகள், கிராமப் பஞ்சாயத்துகளில் 386 வார்டுகள் என மொத்தம் 1571 இடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்த லில் 4 ஆயிரத்து 961 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பதிவான வாக்குகள் டிசம்பர் 30 அன்று எண்ணப்பட்ட நிலை யில், ஆளும் பாஜக-வை மக்கள் படுதோல்வி அடையச் செய்துள்ளனர்.
சிட்டி முனிசிபல் கவுன்சில்கள், நகர முனிசிபல் கவுன்சில்கள், டவுன் பஞ்சாயத்துக்களுக்கு உட்பட்ட மொத்தமுள்ள 1187 வார்டுகளில் காங்கிரஸ் : 508 இடங்களைக் கைப் பற்றி வெற்றி பெற்றுள்ளது. பாஜக- வுக்கு 437 இடங்களே கிடைத்துள் ளது. மதச்சார்பற்ற ஜனதாதளம் 45 இடங்களையும், சுயேச்சைகள் உள்ளிட்ட பிறர் 197 இடங்களையும் வென்றுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் வாரி யாக பார்த்தால், நகர முனிசிபல் கவுன் சிலுக்கு உட்பட்ட 441 வார்டுகளில் 201 வார்டுகளை காங்கிரஸ் கைப்பற்றி யுள்ளது. பாஜக 176 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 வார்டுகள், சுயேட்சை கள் உள்ளிட்டோர் 43 வார்டுகள் என கைப்பற்றியுள்ளனர். டவுன் பஞ்சாயத்துக் கவுன்சி லுக்கு உட்பட்ட 577 வார்டுகளில் காங்கிரஸ் 236 வார்டுகளில் வென்ற நிலையில், பாஜக-வுக்கு 194 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
மதச்சார்பற்ற ஜனதாதளம் 12 இடங்களையும், சுயேச்சைகள் 135 இடங்களையும் வென்றுள்ளனர். 57 கிராம பஞ்சாயத்துகளுக்கான 386 வார்டுகளிலும் காங்கிரஸ் பாஜக -வை முந்தியுள்ளது. சிட்டி முனிசிபல் கவுன்சில்களில் மட்டுமே பாஜக கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளது. 166 சிட்டி முனிசிபல் கவுன்சில் வார்டுகளில், காங்கிரஸ் 61 இடங்களைப் பெற்ற நிலையில், பாஜக 6 இடங்கள் கூடுதலாக 67 இடங் களைப் பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதளம் 12 இடங்களையும், மற்ற வர்கள் 26 இடங்களையும் பெற்றுள் ளனர். அமைச்சர்கள் ஆனந்த்சிங், ஆச்சார் ஹாலப்பா, ஸ்ரீராமுலு, சசிகலா ஜொல்லே; முன்னாள் அமைச்சர்கள் ஸ்ரீமந்த் பாட்டீல், ரமேஷ் ஜர்கிஹோலி தொகுதிகளில் பாஜக படுதோல்வி சந்தித்துள்ளது. குறிப்பாக,
முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த தொகுதியான ஹாவேரி மாவட்டம், சிக்காவியின் பங்காபுரா பேரூராட்சி யின் 23 வார்டுகளில், 14-ஐ காங்கிரஸ் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள் ளது. பாஜக 7-இல் மட்டுமே வென்றுள் ளது. தனது சொந்தத் தொகுதியில் பாஜக தோல்வியடைந்து இருப்பது குறித்து முதல்வர் கூறுகையில், அங்கு எப்போதுமே நாங்கள் வெற்றி பெற்றது கிடையாது. ஏனென்றால் அங்கு குறிப் பிட்ட சிறுபான்மையினர் அதிகம் வசிக்கிறார்கள் என்று சமாளித்துள்ளார். இதனிடையே, தேர்தல் முடிவுகள் கர்நாடகாவில் காங்கிரஸ் அலை உரு வாகியிருப்பதை காட்டுகிறது. நகர்ப் புற உள்ளாட்சி தேர்தலும் அதனை நிரூ பித்துள்ளது. வரும் 2023 சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பா ன்மையுடன் வெற்றி பெறும் என்ப தில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் இன்னும் உயிர்ப் புடன் பலரால் விரும்பப்படுவதை காட்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.