பெங்களூரு,பிப்.26- கர்நாடகா பாஜக அரசால் கல்வி நிலை யங்களில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது.இதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாண விகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு 11 நாட்கள் தொடர்ச்சியாக விசா ரணை மேற்கொண்டது. மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறி ஞர்கள் தேவதத் காமத், ரவிவர்ம குமார் ஆகியோரும், அரசு தரப்பில் தலைமை வழக் கறிஞர் பிரபுலிங் நவத்கியும் வாதிட்டனர். உடுப்பி பி.யு. கல்லூரி சார்பில் மூத்த வழக் கறிஞர் எஸ்.எஸ்.நாகானந்த் வாதிடுகை யில், இந்த போராட்டத்தின் பின்னணியில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (சிஎப்ஐ) அமைப்பினர் இருப்பதாக குறிப்பிட்டார். இதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்ய தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி உத்தர விட்டார். இந்த வழக்கு வெள்ளியன்று விசா ரணைக்கு வந்த போது அரசு தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவத்கி,சிஎப்ஐ குறித்த ரகசிய அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்தார். இதைய டுத்து தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி கூறுகையில், ‘‘இவ்வழக்கில் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் நீதிமன்றம் கேட்டுள்ளது. வேறு அமைப்பினர் இவ்வழக் கில் இணைய விரும்பினால், எழுத்துப்பூர்வ மாக தங்களது வாதத்தை விரைவாக தாக்கல் செய்யலாம். வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைக் கிறோம்’’என்று உத்தரவிட்டார்.