2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலை யில் பாஜக தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அக்கட்சியின் ஒன்றிய மற்றும் மாநில அமைச்சர்கள், ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள், விஎச்பி உள் ளிட்ட இந்துத்துவா அமைப்பினர், சாமி யார்கள் என அனைவரும் மத வன்முறை யை தூண்டும் வகையில் தொடர்ச்சியா கப் பேசி வருகின்றனர். இந்நிலையில், ராமர் கோவில் மூலம் சிறுபான்மையின ருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் சாமியார் ஒருவர் பேசி சர்ச்சை யைக் கிளப்பியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் தலைவராக இருக்கும் ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்தர், “நாங்கள் இந்துக்கள் என்ற முறையில் எங்கள் தேசத்தை இந்து ராஷ்டிரம் என்கி றோம். இதை எதிர்க்க யாருக்கும் அதி காரம் இல்லை. நம் கர்நாடகா ஒரு கன்னட மாநிலமா இல்லையா? அப்படியென் றால் இங்கே கன்னடர்கள் மட்டும்தான் இருக்கிறார்களா? மற்ற மொழிகளுக்கு இங்கு அனுமதி இல்லை என்று யாரா வது சொன்னார்களா? பிற மொழிகள் இருப்பதால், இது கன்னட மாநிலம் இல்லையா? சிறுபான்மையினர் என்ற பெயரில் இந்துக்களின் புனித மையத்தை அவமதிக்கும் பணியைச் செய்யக் கூடாது. அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ப வர்கள் ராமர் கோவில் கட்டுவதை எதிர்க் கக் கூடாது. கோவில் கட்ட அரசு பணம் தரவில்லை, நன்கொடை மூலம் கோயில் கட்டப்பட்டது. எனவே, அரசின் கருவூ லத்தில் சிறுபான்மையினருக்கு பங்கு உண்டு என்று கூறுபவர்களின் வாதத் திற்கு இங்கு மதிப்பில்லை. உச்சநீதி மன்ற உத்தரவின்படி கோவில் கட்டியுள் ளோம்” எனக் கூறியுள்ளார். மடாதிபதி விஸ்வபிரசன்னாவின் கருத்துக்கு கண்ட னங்கள் குவிந்து வருகிறது.