புதுதில்லி, ஏப்.23- கேலோ இந்தியா பல் கலைக்கழக விளை யாட்டுப் போட்டிகள் ஞாயிறன்று (ஏப்.24) முதல் டிடி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரலையாக ஒளிபரப்பவிருக்கிறது. இதனை தொலைக்காட்சி களில் மட்டுமல்லாமல் கைபேசி வழியாகவும் காணலாம். கேலோ இந்தியா விளை யாட்டுப்போட்டி களின் ஒரு பகுதியாக, 2020 –ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கேலோ இந்தியா பல்கலைக் கழக விளையாட்டுப் போட்டி களின் இரண்டாவது தொடர் ஏப்ரல் 24 முதல் மே 3-ம்தேதி வரை நடை பெறுகிறது. நிறைவு விழா மே 3 ஆம் தேதியும் நடை பெறவுள்ளது. இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஒத்துழைப்பு டன் டிடி ஸ்போர்ட்ஸ் விரி வான ஒளிபரப்புக்கு ஏற்பாடு களைச் செய்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 175 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3800-க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். தட களம், வாலிபால், நீச்சல், கூடைப்பந்து, பளு தூக்குதல், மல்யுத்தம், கபடி, கராத்தே, யோகாசனா ஆகியவை நேரலையாக ஒளிபரப்பாகும். ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஒளிபரப்பாகும்.