states

img

உபா சட்டத்தின் கீழ் 98 வழக்குகள் பதிவு - உயர் நீதிமன்றத்தில் தில்லி காவல்துறை தகவல்

கடந்த 2005-ஆம் ஆண்டிலிருந்து, உபா சட்டத்தின் கீழ் 98 வழக்குகளை பதிவு செய்துள்ளதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டமான உபா சட்டம் கடந்த 2004-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் உபா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து தில்லி உயர்நீதிமன்றம் தில்லி காவல்துறையிடம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில், கடந்த 2005-ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரையில் 98 வழக்குகள் உபா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 15 வழக்குகள் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மீதமுள்ள 83 வழக்குகள் விசாரணை நடத்தியதாகவும், அதில் 40 வழக்குகளின் குற்றப்பத்திரிகை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 வழக்குகளின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. 

மேலும், 83 வழக்குகளில், 40 வழக்குகளின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன, 29 வழக்குகள் நிலுவையில் உள்ளன, 14 வழக்குகள் விசாரணை நடந்து வருகின்றன.