states

img

மாநில உரிமை மீட்பு பிரச்சாரம் புதுச்சேரியில் துவங்கியது

புதுச்சேரி, நவ.7- மாநில உரிமையை மீட்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் சிறப்பு மாநாட்டை விளக்கி புதுச்சேரி முழுவதும் பிரச்சாரம் துவங்கியது. பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள ரேசன் கடை களை திறக்க வேண்டும், மின்துறையை தனியார்மய மாக்கும் முடிவை திரும்பபெற வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தியும், “புதுச்சேரி மாநில உரிமைகளை மீட்கவும், மக்கள் நலன் பாது காப்பு” என்ற தலைப்பில் வரும் 13ஆம் தேதி சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் மற்றும் தலைவர்கள் பங்கேற்கின்ற னர். இந்த மாநாட்டை விளக்கி புதுச்சேரி முழுவதும் ஒருவாரக் காலம் தெருமுனைக் கூட்டங்கள், விழிப்புணர் பிரச்சாரம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதி யாக, புதுச்சேரி காந்தி வீதியில் மாநில செயற்குழு உறுப்பினர் பெரு மாள் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். முத்தி யால்பேட்டை மூத்தத் தலைவர் முருகன் துவக்கி வைத்து பேசினார். உழவர்கரை பகுதியில் நடை பெற்ற பிரச்சாரத்தை நகரச் செயலாளர் ராம்ஜி துவக்கி வைத்தார். இந்த பிரச்சாரங்களில் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் சீனுவாசன், கொளஞ்சியப்பன், கலிய மூர்த்தி, சத்தியா, மாநிலக்குழு உறுப்பினர் கள் சரவணன், இளவரசி, நகர கமிட்டி செயலாளர் மதி வாணன், நகரக்குழு உறுப்பி னர் மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.