states

img

சிறப்புக்கூறு நிதி மடைமாற்றம்: தலித்-பழங்குடி கூட்டமைப்பு ஆவேசம்!

புதுச்சேரி,மார்ச்.11- சிறப்புக்கூறு நிதியை முழுமையாக செலவிடக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலித் மக்களின் மேம்பாட்டிற்கு 2021ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட சிறப்பு கூறு நிதியை முழுமையாக செலவிட வேண்டும், துணைத் திட்ட நிதியை செலவிடாத அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை படிக்கும் தலித் மாணவர்களுக்கான கல்வி நிதியை செலவு செய்வதற்கு மாறாக, சென்டாக்கில் தேர்வான மாணவர்களுக்கு மட்டுமே என்ற பாராபட்ச நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தலித் மற்றும் பழங்குடிகள் இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீல.கங்காதரன், தலித் உரிமை இயக்கத்தின் தேசிய தலைவர் ராம மூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் ராமசாமி ஆகி யோர் கூட்டாக தலைமை தாங்கினர். இதில் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், சரவணன், பிரகாஷ், புண்ணியக்கோடி, எழிலன்,சேகர்,ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அண்ணா சிலை அருகில் இருந்து பேரணியாக சட்டப்பேரவையை முற்றுகையிட சென்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.