புதுச்சேரி, டிச. 31- புதுச்சேரி அருகே வேட்டையாடப்பட்ட அரியவகை பறவைகள், விலங்குகள் மற்றும் நாட்டுத் துப்பாக்கிகளை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டு பகுதியில் திருக்காஞ்சி சாலையில் நரிக்குறவர்கள் குடியிருப்புகள் உள்ளது. இங்கு சனிக்கிழமை வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுளவள்ளி தலைமையில் துணை இயக்குநர் குமாரவேல், வன அலுவலர் பிரபாகர் உள்ளிட்ட வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது நரிக்குறவர்கள் வேட்டையாடி விற்பனைக்காக வைத்திருந்த நீர் காகம், கழுகு, நத்தக்கொத்தி, நாரை, முஞ்சள் மூக்கன், ஆள்காட்டி குருவி உள்ளிட்ட 67 வகை பறவை இனங்கள், உடும்பு 2, பாலாமை 1, முயல்கள் 2, கிளிகள் 2 உயி ரோடும், இறைச்சியாகவும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட 4 நாட்டுத் துப்பாக்கிகள், பாஸ்பரஸ் குண்டுகள், விலங்குகள் பிடிக்க பயன்படுத்தப்படும் கன்னிகள், அரிவாள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயு தங்கள் ஆகியவற்றைளையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் ஒரு வீட்டில் இருந்து 3 கிலோ மான்கறி கைப்பற்றப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பறவைகள், ஆயுதங்கள் புதுச்சேரி வனத்துறை அலு வலகத்துக்கு கொண்டுவரப்பட்டன. இதுகுறித்து வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுள வள்ளி கூறும்போது, 4 வீடுகளில் நடத்திய சோதனையில் அரிய வகை பறவைகள், விலங்குகள், துப்பாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். குறிப்பாக மான்கறி அங்கு இருந்தது. இருப்பினும் அது மான்கறியா அல்லது வேறு விலங்கின் கறியா என பரிசோதனை செய்ய ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. மான் கறியை விற்றவருக்கும் அதை வாங்கியவருக்கும் 7 ஆண்டு வரை தண்டனை உண்டு. மேலும், கியூ. ஆர் கோடுகளைக் கொண்டு செல்போனில் வாடிக்கையாளர்களை உரு வாக்கி ஆன்லைன் மூலம் பணம் பரி மாற்றம் செய்து கொண்டு விலங்குகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததும், பறவைகள், விலங்குகள் அனைத்தும் தமிழகப் பகுதியில் வேட்டையாடப்பட்டு புதுச்சேரியில் விற்க கொண்டு வரப்பட்டவை என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தமிழக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன விலங்கு களை வேட்டையாடியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.