புதுச்சேரி காவலர் பணிக்காக நடத்தப்பட்ட உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு பயிற்சி முகாம் பாகூரில் நடைபெற்றது. முகாமில் பங்கேற்றவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் கலியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பாகூர் கொம்யூன் செயலாளர் கந்தன், பொருளாளர் சண்முகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் பழனிசாமி,சேத்திலால் ஆகியோர் கலந்துகொண்டனர்.