புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த அஸ்வனி குமார் புதுடில்லிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ராஜீவ் வர்மா புதிய தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பின்போது வேளாண் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.