states

img

போராட்ட வரலாற்றை ஊழியர்களிடம் கொண்டு செல்வோம்: எம்.எஸ்.வெங்கடேசன்

புதுச்சேரி, டிச. 30- தலைவர்களின் போராட்ட வரலாறுகளை ஊழியர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று வரு மான வரித்துறை ஊழியர் கூட்ட மைப்பின் அகில இந்தியத் தலைவர்  எம்.எஸ்.வெங்கடேசன் கேட்டு கொண்டார். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் கே.கே.என். குட்டியின் படத் திறப்பு விழா மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன புதுச்சேரி முன்னாள் தலைவர் கே.மீனாட்சிசுந்தரத்தின் 11ஆவது ஆண்டு நினைவு தினம் முல்லை நகரில் நடைபெற்றது. சம்மேள னத்தின் பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன், ஆலோசகர் கீதா ஆகி யோர் தலைமை தாங்கினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வரு மான வரித்துறை ஊழியர் கூட்ட மைப்பின் அகில இந்தியத் தலைவர்  எம்.எஸ்.வெங்கடேசன் பேசுகையில், “ஒன்றிய பாஜக அரசு ஊழியர்க ளுக்கு எதிராக பல்வேறு தாக்குதல் களை தொடுத்து வருகிறது. போராடி  பெற்ற உரிமைகளை ஆட்சியார்க ளால் இழக்கும் நிலை ஏற்பட்டுள் ள்ளது”என்றார். நாடு முழுமைக்கும் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வரு கிறது. மறுபக்கத்தில், ஒன்றிய அரசு அலுவலகங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் உள்ளது என்றும் அவர் கூறினார். நம்மை வழிநடத்திய தலைவர்கள் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அத்தகைய போராட்ட வரலாறுகளை இன்றைய ஊழியர்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும். ஆட்சியாளர்களின் மக்கள் விரோத, ஊழியர் விரோத கொள்கைகளை எதிர்த்து போராட அனைத்து ஊழியர்களையும் திரட்டி வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். இதில் முன்னாள் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர் பேரவையின் தலைவர் கே.முருகன், புதுச்சேரி அமைச்சக ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நமச்சிவாயம், சம்மேளன கவுரவத் தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.