புதுச்சேரி, மார்ச் 26 - ‘பரிவர்த்தன் - சிறைச்சாலையிலிருந்து பெருமை மிக்க வாழ்வுக்கு' என்கிற முன்முயற்சியை இந்தியன்ஆயில் நிறு வனம் எடுத்துள்ளது. 8 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களி லுள்ள 15 சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்ட சிறைவாசிகளுக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட சில விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க கால நீட்டிப்பு செய்துள்ளது. புதுச்சேரி சிறைத் துறை தலைவர் ரவிதீப் சிங், இந்தியன் ஆயில் தென் மண்டல செயல் இயக்குநர் கே. சைலேந்திரா மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதி காரிகள் முன்னிலையில் இந்நிகழ்வை இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் வைத்யா புதுதில்லியில் இருந்து இணைய வழியில் தொடங்கி வைத்தார். நிறுவனத்தின் தலைவர் வைத்யா பேசுகையில், “பரிவர்த்தன் முன்முயற்சியின் முதல் இரண்டு கட்டங்கள் சமூக இயக்கமாகவே மாறி, சிறை வாசிகளின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தியிருக்கிறது. சமுதாயத்தில் தயக்கம் இன்றி ஒருங்கிணைந்து செயல்பட ஏதுவாக மன திடத்தை அளித்துள்ளது. இப்படிப்பட்ட தனித்தன்மை வாய்ந்த முன்முயற்சியை எடுத்தது இந்தியன்ஆயில் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது”என்றார். 1,100-க்கு மேற்பட்ட சிறைவாசிகளுக்கு கூடைப்பந்து, பேட் மின்ட்டன், கைப்பந்து, சதுரங்கம், டேபிள் டென்னிஸ், கேரம் ஆகிய விளையாட்டிற்கு தனிப்பட்ட பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் பிஎம் மத்திய சிறை, ராஞ்சி, மத்திய சிறை, ஜாம்ஷெட்பூர் மாவட்ட சிறை, தன்பந்த், ராஜமுந்திரி மத்திய சிறை, ஆந்திரா, பெங்களூரு சிறை, மாவட்ட சிறை குருஷேத்ரா , ஜெய்ப்பூர் மத்திய சிறை, மத்திய சிறை, ராய்ப்பூர் , கிளை சிறை, ஹல்த்வானி , மாவட்ட சிறை தேராதூன் , மாவட்ட சிறை, ஷில்லாங், மாவட்ட சிறை, ஜம்மு , சண்டிகர் மத்திய சிறை , மத்திய சிறை, புதுச்சேரி , ப்ரோத்ரபூர் சிறை, போர்ட் ப்ளேர் ஆகிய சிறைச்சாலைகளை சேர்ந்த சிறைவாசிகள் பயனடைவார்கள் என இந்தியன் ஆயில் தெற்கு வட்ட பொதுமேலாளர் வி.வெற்றி செல்வகுமார் ஓர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.