புதுச்சேரி லாசுப்பேட்டை செண்பக விநாயகர் கோயில் வீதி குடியிருப்போர் நலச் சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழாவுக்கு சங்கத்தின் கவுரவத் தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். மூத்த தொழிற்சங்கத் தலைவர் கே.முருகன் பெயர் பலகையை திறந்து வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பிரபுராஜ், சீனிவாசன், கொளஞ்சியப்பன், மாநிலக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சரவணன், சங்கத்தின் செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.