states

img

புதுச்சேரி சாலையில் கொட்டப்படும் குப்பைகள்: பொதுமக்கள் அவதி

புதுச்சேரி, அக். 29- புதுவை மதகடிப்பட்டு அருகே உள்ள திருபுவனை களத்து மேட்டு தெருவில் சாலை யின் நடுவே குப்பைகள் கொட்டப்படு கின்றன. இந்த சாலையை விவ சாய நிலத்திற்கு செல்லும் வழி யாகவும், பல்வேறு செயல்பாட்டுக்கு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்  தற்பொழுது சாலை நடுவே நீண்ட தூரம் குப்பைகள் தேங்கி நிற்பதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் மழை பெய்து குப்பையிலிருந்து பூழு, பூச்சிகள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தினசரி குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.