states

img

மின்துறையில் ஓய்வு பெற்றோர் நியமனம்

புதுச்சேரி, மார்ச் 4- ஓய்வுபெற்றவர்களை மின்துறை யில் நியமிக்கும் முடிவை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி உப்பளத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படித்து முடித்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புதுச்சேரி வேலை வாய்ப்பகத்தில் பதிவுசெய்து வேலை க்காக காத்திருக்கும் நிலையில், புதுச்சேரி அரசின் மின்துறையில் இளநிலை மற்றும் உதவி பணி யாளர் காலிபணியிடங்களுக்கு ஒய்வுபெற்ற இளநிலை பொறியாளர் மற்றும் உதவிபொறியாளரை  பணியில் அமர்த்துவதை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சங்கத்தின் நகரக்குழுத் தலைவர் ரஞ்சித், உழவர்கரை கமிட்டி தலைவர் நிலவழகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரதேச தலைவர் பாஸ்கர், செயலாளர் ஆனந்து, பொருளாளர் சஞ்சய், இந்திய மாணவர் சங்க செயலாளர் பிரவீன் ஆகியோர் பேசினர். ஓய்வுபெற்றவர்களை நியமிக்கும் முடிவை  மின்துறை  கைவிடவில்லை என்றால் மார்ச் 23இல் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

;