states

img

மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிடக் கோரி கண்ணில் கருப்புத் துணி கட்டி போராட்டம்

புதுச்சேரி அரசின் மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிடக் கோரி மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சுதேசி பஞ்சாலை எதிரில்  திங்களன்று (ஜூலை 11) கண்ணில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  இதில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரேமதாசன் தலைமையில், அரசு ஊழியர் சம்மேளனம், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி,  உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள்  ராமசாமி,  முருகன், சீனிவாசன், ராதாகிருஷ்ணன், அபிஷேகம், ஞானசேகரன்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.