மக்களவைத் தேர்தலில் முக்கியமான மாநிலங்களில் ஒன்றான பீகாரில், தாங்கள் போட்டியிடும் ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இடதுசாரிக் கட்சிகள் இறங்கியுள்ளன.
பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்.ஜே.டி), காங்கி ரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனி னிஸ்ட்)(விடுதலை) மற்றும் இந் திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தொகுதிப் பங்கீடு செய்து கொண்டு ஓர் அணியில் போட்டியிடுகின்றன. இதில் ஆர்.ஜே.டி. 26 தொகுதிகளி லும், காங்கிரஸ் 9, சிபிஐ(எம்-எல்) (விடுதலை) 3, சிபிஐ(எம்) மற்றும் சிபிஐ தலா ஒரு இடத்திலும் வேட்பா ளர்களை நிறுத்தியிருக்கின்றன.
3 இடங்களில் போட்டியிடும் சிபிஐ(எம்-எல்)(விடுதலை), தனது வேட்பாளர்களை அறிவித்துள் ளது. அர்ரா தொகுதியில் சுதாமா பிர சாத், நாளந்தாவில் சந்தீப் சவுரவ் மற்றும் கராகட்டில் ராஜாராம் சிங் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். ககாரியா தொகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக சஞ்சய் குமார் மற்றும் பேகுசராய் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அவதேஷ் ராய் நிற்கின்றனர்.
பீகார் மாநிலத்தில் இருந்து கடந்த பல தேர்தல்களில் இடது சாரிக் கட்சிகளின் பிரதிநிதிகள் மக்க ளவைக்குத் தேர்வாகவில்லை. இந்த முறை போட்டியிடும் தொகுதி கள் அனைத்திலும் இருமுனைப் போட்டி நிலவுகிறது. கடந்த சட்ட மன்றத் தேர்தலின்போது நல்ல வெற்றியைப் பெற்ற இடதுசாரிக் கட்சிகள் வசம் தற்போது 15 சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்த வெற்றியைத் தக்க வைக்கும் வகையில், 5 மக்களவைத் தொகுதி களிலும் இடதுசாரிக் கட்சிகள் தங் கள் தேர்தல் பணிகளைத் தொடங்கி யுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் ககாரியா தொகு திக்கு உட்பட்டு ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் மகா கூட்டணி வெற்றி பெற்றிருந் தது. இடதுசாரிக் கட்சிகள் போட்டி யிடும் ஐந்து தொகுதிகளிலுமே இது போன்ற நிலைமைதான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.