states

img

பீகார்: லாரி மோதி 3 காவலர்கள் பலி

பீகார் மாநிலத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 3 காவலர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சென்ற வாகனத்தின் மீது கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 3 காவலர்கள் பலியானதோடு 2 பேர் படுகாயம் அடைந்தனர்.  காயமானவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கு காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.