இத்தாலியிலிருந்து விமானம் மூலம் பஞ்சாப் வந்த 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் 179 பயணிகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸுக்கு பயணம் மேற்கொண்டனர். அப்போது விமானத்தில் பயணித்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அமிர்தசர்ஸ் விமான நிலையம் வந்த 179 பயணிகளில், 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 19 பேர் குழந்தைகள். இதனை விமான நிலைய இயக்குனர் வி.கே சேத் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதனையடுத்து கொரோனா பாசிட்டிவ் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.