states

img

பஞ்சாப்: பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் பலி: விசாரணை குழு அமைப்பு

பஞ்சாப்பில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தனது  சக பாதுகாப்பு வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.  

இந்தியா – பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகா பகுதியிலிருந்து 20கிமீ தூரத்தில் அமைந்துள்ள காசாவில் இன்று காலை 9.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.  

இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் திடீரென சக வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய கான்ஸ்டபிள் சத்தேப்பா எஸ்.கே. உள்பட 5 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இதில் படுகாயமடைந்த மற்றொரு வீரர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அதனைதொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையின் மூத்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

மேலும் இந்த துப்பாக்கிச் சூடு எதற்காக நடந்தது? என்பதைக் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

;