states

img

அந்தரத்தில் சுழன்ற ராட்டினம் விழுந்ததில் 10 பேர் காயம்

பஞ்சாப்பில் அந்தரத்தில் சுழன்ற ராட்டினம் விழுந்ததில் 10 பேர் காயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

பஞ்சாபின் மொஹாலியில் பொருட்காட்சி நடைபெற்றது. அங்கு  பல பொழுதுபோக்கு விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த ராட்டினத்தில் குழந்தைகள் உட்பட பலர் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மேலே இருந்து  ராட்டினம் கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த மோசமான விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹ

 

;