states

img

நேபாளம்: தீ விபத்தில் 5 பேர் பலி  

நேபாளத்தில் ஷூ கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஷியாமு ஆர்யால் கூறுகையில்,  டாங் மாவட்டம் துளசிபூர் பகுதியில் உள்ள ஷூ கடை ஒன்றில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவம் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் சஜிதா கதுன்(13), ஹசன் பக்ஷ் (14), மசின் பக்ஷ்(15), நஜர்தீன் அலி (40) மற்றும் அபிதீன் அலி (5)  ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதன்பின் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து தீவிபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.