தூத்துக்குடி, செப். 15 - முறப்பநாடு அருகே கிராம நிர்வாக அதிகாரி (VAO) லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்யப் பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராமசுப்பு மற்றும் மாரி முத்துவிற்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்த வர் லூர்து பிரான்சிஸ். இவர், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக இருந்து வந்தார். 2023 ஏப்ரல் 25 அன்று, லூர்து பிரான்சிஸ் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, இவ்வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தாமிரபரணி ஆற்றில், இருசக்கர வாகனம் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ராமசுப்பு மீது, விஏஓ என்ற வகை யில் லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததும், இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் ராம சுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர்தான், லூர்து பிரான்சி ஸை படுகொலை செய்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, லூர்து பிரான்சிஸ் கொலை குறித்து ஐபிசி பிரிவு 449 - ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைதல், 302 கொலை,
506 ஆயுதங்களுடன் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்த முறப்பநாடு போலீசார், கலியாவூர் வேதகோயில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் ராம சுப்பிரமணியன் என்ற ராமசுப்பு (41), முருகன் மகன் மாரிமுத்து (31) ஆகியோரை கைது செய்தனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள், இரும்பு ராடு உள்ளிட்ட 13 பொருட்களையும் அடை யாளம் கண்டனர். தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில், முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம் ஆகஸ்ட் 21 அன்று இவ்வழக்கில் விசாரணையைத் துவங்கினார். அவர், கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்ஸிஸ் மகன் ஏசுவடியான், கிராம நிர்வாக உதவியாளர் கணேசன் அருணாச்சலம், ஆறுமுகம், பிரின்ஸ் உள்பட 31 சாட்சிகளிடம் விசார ணை நடத்தினர். இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று (செப். 15) இந்த வழக்கில் தீர்ப்பளித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செல்வம், குற்றம் சாட்டப்பட்டிருந்த ராமசுப்பு, மாரி முத்து ஆகியோருக்கு ஐபிசி பிரிவு 449-இன் கீழ் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 1,000 ரூபாய் அப ராதமும், பிரிவு 302-இன் கீழ் ஆயுள் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும், பிரிவு 506-இன் கீழ் 1 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார். ராமசுப்பு மீது ஏற்கெனவே கொலை முயற்சி உள்பட 15 வழக்குகளும், மாரிமுத்து மீது கொலை முயற்சி உள்பட 6 வழக்குகள் உள்ள நிலையில், லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் 24 நாட்களில் விசார ணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.