தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு தேர்வில் இந்தி பாட வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் கைது.
தெலுங்கானா மாநிலத்தில் 10ம் வகுப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை நடைபெற்ற 10-ம் வகுப்பு இந்தி பாடத்துக்கான வினாத்தாள் முன்கூட்டியே வாட்ஸ் ஆப் குழுக்களில் பரவியுள்ளது இதனால் கண்டதும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஹனம்கொண்டா மாவட்டம் கமலாபூரில் உள்ள தேர்வு மையத்திலிருந்து வினாத்தாளை பாஜக பிரமுகர் புரம் பிரசாந்த் என்பவர் வாட்ஸ்அப் மூலம் வினாத்தாளை பண்டி சஞ்சய்க்கு அனுப்பியுள்ளது அம்பலமாகியுள்ளது.இது பற்றி விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தகுந்த ஆதரங்களை கொண்டு பண்டி சஞ்சயை கைது செய்துள்ளனர்.