119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டமன்றத்திற்கு நவம்பர் 30 அன்று வாக்குப் பதிவு நடைபெற் றது. பதிவான வாக்குகள் ஞாயி றன்று காலை 8 மணி முதல் எண் ணப்பட்டன. இரவு 7 மணி நிலவரப் படி காங்கிரஸ் கட்சி 64 இடங்களிலும், பிஆர்எஸ் கட்சி 39 இடங்களிலும், பாஜக 8 இடங்களி லும், மஜ்லிஸ் கட்சி 7 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடங்களி லும் முன்னிலை வகித்தன. பெரும்பான் மைக்கு 60 இடங்கள் தேவை என்ற நிலை யில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக் கும் அதிகமாக 4 இடங்கள் கூடுதலாக (64) முன்னிலையில் இருந்தது. தெலுங்கானா வில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது ஏறக் குறைய உறுதியாகிவிட்டநிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களை வளைத்து பிஆர்எஸ் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகியது. இதனால் முன் னெச்சரிக்கையாக காங்கிரஸ் எம்எல்ஏக் கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.