மாணவர் ஒருவர் தாக்கிய தெலுங்கானா மாநிலத்தில் பாஜக எம்.பி-யின் மகன் பகீரத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலங்கானா பாஜக எம்.பி பாண்டி சஞ்சய்யின் மகன் பகீரத், கல்லூரி மாணவர் ஒருவரை பல்கலைக்கழக வளாகத்திலும், விடுதி அறையிலும் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கல்லூரி தரப்பில் அளித்த புகாரின் பேரில் பகீரத் மற்றும் ஒருவர் மீது ஐபிசி 341, 323, 504, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.