states

தூக்கி எறியப்பட்டது “இடைக்கால” அரசு

காரகஸ், ஜன.3- சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த “இடைக்கால” அரசைக் கலைக்கும் வாக்கெடுப்பில் அதை உருவாக்குவதற்கு துணை நின்றவர்களே கலைக்கவும் ஆதரவு தெரிவித்தனர். வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜூவான் குவாய்டோவின் தலைமையில் ஒரு “இடைக் கால” அரசை அமைப்பதாக எதிர்க்கட்சி கள் அறிவித்தன. இந்த அரசுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அங்கீ காரம் அளித்தன. வெளிநாடுகளில் உள்ள  வெனிசுலாவின் சொத்துக்களை இந்த இடைக்கால அரசுக்கு சொந்தமாக மாற்றுவ தாகவும் இந்த நாடுகள் அறிவித்துக் குழப்பத்தை ஏற்படுத்தின. ஆனால், மக்களின் தொடர் ஆதரவால் நிகோலஸ் மதுரோவின் தலைமையிலான அரசு நிலையாக இருந்தது. இதனால் அர சுக்கும், எதிர்க்கட்சிகளின் பிரதிநிதி களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது.

2015 ஆம் ஆண்டில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டே இடைக்கால அரசு உருவாக்கப் பட்டது. தற்போது புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட னர். ஆனாலும், எதிர்க்கட்சிகள் அந்த  நாடாளுமன்றத்தை வைத்தே அமெரிக்க ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. தற்போது அதே உறுப்பினர்கள் இடைக்கால அரசைக் கவிழ்க்கவும் ஆதரவு தெரி வித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் சட்டவிரோத அரசைக் கலைப்பதன் மூலமே, நாட்டின்  முன்னேற்றத்திற்கான பாதை கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகளுடனான பேச்சு வார்த்தை பற்றி நிகோலஸ் மதுரோ  குறிப்பிட்டிருந்தார். பேச்சுவார்த்தை களுக்குப் பிறகுதான், அமெரிக்க நிறுவன மான  செவ்ரோனுக்கு வெனிசுலாவில் எண்ணெய் எடுத்து, சுத்திகரிப்பு செய்து, ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி வழங்கப் பட்டது. இத்தகைய நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.