செகந்திராபாத் ரயில் நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐதராபாத் விரைவு ரயிலில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐதராபாத் விரைவு ரயிலின் இரண்டு காலி பெட்டிகள் இன்று காலை 10.50 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து 5 தீயணைப்பு வாகனங்களுடன் அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.