states

img

பாஜக தலைவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

தெலுங்கனாவில் பாஜக தலைவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து கரிம்நகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானா அரசுக்கு எதிராக கரிம்நகரில் செயல்பட்டு வரும் பாஜக அலுவலகத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் காவல்துறையினருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மாநில தலைவர் சஞ்சய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் கரிம் நகர் நீதிமன்றத்தில் சஞ்சய் ஆஜர்படுத்தப்பட்டார். இவரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி 14 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.