“எங்கள் எதிர்காலம் பாழாகாமல் தடுக்க உங்க ளுக்கு (கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு) இன்னும் ஒரு வாய்ப்பு உள் ளது. ஹிஜாப் அணிந்து எங்களைத் தேர்வு எழுத அனுமதிப்பது குறித்து நீங்கள் முடிவு செய்ய லாம். எங்களது கோரிக்கையைக் கருத்தில் கொள்ளுங்கள். நாங்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம்” என்று கர்நாடகா கராத்தே சாம்பியனும், ஹிஜாப் தடைக்கு எதிராக நீதி மன்றத்தை அணுகியவர்களில் ஒருவரு மான ஆலியா ஆசாதி தனது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.