states

img

உ.பி.யில் அரங்கேறிய போலித் திருமணம்; கோடிக்கணக்கில் சுருட்டிய பாஜக எம்எல்ஏ?

மக்களவைத் தேர்தல் நெருங்கி யுள்ள நிலையில், அதிக மக்கள வைத் தொகுதிகளை (80) கொண்ட  உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்களை திசை திருப்ப பாஜக பல்வேறு போலித் திட்  டங்களை அறிவித்து வருகிறது. பாஜக வின் அயோத்தி ராமர் கோவில் அரசியல் ஆதாய நாடகம் சமீபத்தில் நிறைவு பெற்ற  நிலையில், கடந்த ஜனவரி 25-ஆம் தேதி  பலியா மாவட்டத்தின் மணியா நகரில் ஏழைப் பெண்களுக்கு இலவச திருமண  விழா நடைபெற்றது. இத்திருமண விழா வில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு சீர்வரிசை மற்றும் ரூ.51,000 உதவித்  தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப் பட்ட நிலையில், பாஜக எம்எல்ஏ கேட்கி சிங் தலைமையில் நடைபெற்ற இந்த இலவச திருமண விழாவில் மொத்தம் 568  ஜோடிகள் கலந்து கொண்டன. இந்த இலவச திருமண விழாவை மக்களவை தேர்தல் பிரச்சாரப் பொரு ளாக வைத்து பாஜக கடந்த ஒரு வாரமாக கொண்டாடி வரும் நிலையில், திருணம் செய்து கொண்ட 568 ஜோடி களில் 200-க்கும் மேற்பட்ட ஜோடிகள், போலி ஜோடிகளாக கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது. அதாவது ஏற்கெனவே  திருமணம் ஆகி குழந்தை உள்ளவர்களும், போலி ஜோடியாக நடித்து திருமண  உதவித்தொகையை பெற்றுச் சென்றுள்ளனர். தாங்களாகவே தாலி கட்டிக்கொண்ட பெண்கள் சில பெண்கள் ரூ.500 முதல் ரூ. 2000 வரை பணம் கொடுத்தது இளைஞர்களை அழைத்து வந்து திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர். மணமகனாக யாரும் கிடைக்காத பெண்கள் தாங்களா கவே தாலி கட்டிக்கொண்டனர். அங்கு  என்ன கூட்டமாக இருக்கிறது என திரு மண விழாவை வேடிக்கை பார்க்க வந்த வர்களையும் தற்காலிக மணமகனாக மாற்றி ரூ.2 கோடிக்கும் அதிகமான தொகை சூறையாடப்பட்டுள்ளது. 15 பேர் கைது இந்த போலித் திருமண விவகாரம் சமூக வலைத்தளங்களில் வெளியான பின்பு உத்தரப்பிரதேச போலீசார் வழக்கு பதிவுசெய்து 2 அரசு அதிகாரிகள் உட்பட 15 பேரை கைது செய்துள்ளனர்.