states

img

சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு நீங்கள் ஏன் ஆதாரம் கேட்கிறீர்கள்?

ராகுலை தரம்தாழ்ந்து விமர்சித்த அசாம் பாஜக முதல்வர்

டேராடூன், பிப்.12- உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தலை யொட்டி அம்மாநில பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி துவங்கி பாஜக தலைவர்கள் பலரும் தீவிரப்  பிரச்சாரம் மேற்கொண்டு வரு கின்றனர். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் உத்தரகண்ட்டில் பிரச்சாரத் தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, மிகவும் தரந்தாழ்ந்து ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியுள்ளார். பாகிஸ்தான் மீது இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய தாக மோடி அரசு கூறிவரும் நிலையில், அதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.  இதற்கு பதிலளித்துள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மா, “மறைந்த ஜெனரல் பிபின் ராவத் தலைமையில் பாகிஸ் தானில் இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. தாங் கள் தாக்குதல் நடத்தியதாக ராணுவம் கூறுகிறது. அவ்வா றிருக்க, ஆயுதப் படையிடம் ஆதாரம் கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? பிபின் ராவத்தை நீங்கள் நம்ப வில்லையா?” என்று கேட்ட தோடு நிற்காமல், “நீங்கள் ராஜீவ் காந்தியின் மகனா, இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்க ளிடம் ஆதாரம் கேட்டிருக்கி றோமா?” என்றும் தரம்தாழ்ந்து விமர்சித்துள்ளார்.