வடக்கு 24 பர்கானா, பிப்.26- மேற்கு வங்க மாநிலத்தில் நடை பெறும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இடது முன்னணி வேட்பா ளர்களை ஆதரித்து பஸ்சிம் மேதினி பூர் மாவட்டத்தில் உள்ள சந்திரகோனா நகரில் நடைபெற்ற பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சுசாந்த கோஷ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அசோக்நகர் கல்யாண்கர் நக ராட்சித் தேர்தலில் போட்டியிடும் இடது முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதர வாக வடக்கு 24 பர்கானா மாவட்டம் அசோக்நகரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிமன் பாசு பேசினார். நாடியா மாவட்டத்திலுள்ள ரண காட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சா ரத்தில் சார்பான மாற்றுக் கொள்கைக ளுக்கு வாக்களியுங்கள். இந்த பிரச்சா ரத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப் பினர் சூர்ய காந்த மிஸ்ரா கலந்து கொண்டார். இந்தப் பிரச்சாரத்தில் திரி ணாமுல் காங்கிரசை தோற்கடிப்போம், பாஜக-வை வீழ்த்துவோம் என உறுதியேற்கப்பட்டது.