states

img

“வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்குவோம்..!”

புதுதில்லி, பிப்.21- “பயங்கரவாதிகள் சைக்கி ளைத் தேர்வு செய்கிறார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. இதன்மூலம் உ.பி. மக்களையும், தேசத்தையும் பிர தமர் மோடி அவமதித்துள்ளார்” என்று கண்டனங்கள் எழுந்துள் ளன. உ.பி. சட்டப்பேரவைத் தேர்த லையொட்டி, சமாஜ்வாதி கட்சி, தனது சின்னமான சைக்கிளை பிர பலப்படுத்தும் வகையில் “சாமா னியர்களின் சவாரி” என்று விளம் பரங்களையும், முழக்கங்களை யும் முன்வைத்து வருகிறது. இதற்கு நல்ல வரவேற்பும் உள்ளது. இதனிடையே, 2008-ஆம் ஆண்டு நடந்த அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்ப வம் தொடர்பாக, சில நாட்க ளுக்கு முன்பு 49 பேர் குற்றவாளி களாக அறிவிக்கப்பட்டதைக் தொடர்புப்படுத்தி, குண்டு வெடிப்பு சம்பவத்தையும், சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் சின்னத்தையும் இணைத்து பிர தமர் நரேந்திர மோடி பேசினார்.

“ஆரம்பகால குண்டு வெடிப்புச் சம்பவங்களில், குண்டுகள் சைக்கிள்களில்தான் வைக்கப்பட்டிருந்தன... அவர் கள் (பயங்கரவாதிகள்) ஏன் சைக்கிள்களைத் தேர்ந்தெடுத் தார்கள் என்று எனக்கு ஆச்சரிய மாக இருக்கிறது” என்று பிரத மர் மோடி கூறியிருந்தார். சைக்கி ளைத் (தேர்தல் சின்னம்) தேர்ந் தெடுப்பவர்களுக்கு மறைமுக மாக பயங்கரவாதிகள் முத்திரை யையும் பிரதமர் மோடி குத்தி னார். இதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கண்டனம்  தெரிவித்துள்ளார். “சைக்கிள் விவசாயிகளை அவர்களின் வயல்களுடன் இணைக்கிறது, செழிப்புக்கு அடித்தளம் அமைக் கிறது. சைக்கிள் நமது மகள் களை பள்ளிக்கு அழைத்துச் செல் கிறது. சமூக கட்டுப்பாடுகளுக்கு அப்பால் உயர்ந்து, அது முன் னேறி, பணவீக்கத்தால் தீண்டப் படாமல் முன்னேறுகிறது; சைக்கி ளானது சாதாரண மனிதனின் சவாரி, கிராமப்புற இந்தியாவின் பெருமை. சைக்கிளை அவமதிப் பது ஒட்டுமொத்த தேசத்துக்கும் அவமானம்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவன் பொம்மை விமானத் தைப் பார்த்து சிரித்துக்கொண்டி ருக்கும் படத்தையும் அகிலேஷ் இணைத்துள்ளார்.