திருவனந்தபுரம், மார்ச் 19- திருவனந்தபுரத்தில் நடந்துவரும் 26ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை பாவனாவுக்கு அரங்கமே எழுந்து நின்று கேரளாவின் அன்பான வரவேற்பு அளித்தது. அரங்கில் அமர்ந்திருந்த பாவனாவை அவர் எதிர்பாராத விதமாக திரைப்பட அகாடமி தலைவர் அழைத்தார். அப்போது அரங்கம் அதிர கைதட்டல் எழுந்தது. பாவனாவுக்கு கேரளம் உறுதுணை யாக உள்ளது என்பதை தெளிவாக உணர்த்தியது அந்த கரவொலி. மேடைக்கு வந்த பாவனா கலை இயக்குனர் பீனாபோலின் அன்பான அரவணைப்பு அனைவரையும் நெகிழ வைத்தது. மறுவாழ்வு பெற்ற இருவர் இந்த விழாவில் மீண்டு வந்தனர். ஐஎஸ் தாக்குதலில் இருகால்களையும் இழந்து உயிர்பிழைத்த குர்திஷ் இயக்குனரான லிசா சலானும் பாவனாவும் இணைந்து மேடையில் தோன்றியபோது கேரளா யாருடன் இருக்கிறது என்பது தெளிவானது. கலாச் சாரத் துறை அமைச்சர் சாஜி செரியானும், பாவனா கேரளாவுக்கு முன்மாதிரி என்று சந்தேகத்திற்கு இடமின்றி அறிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை பெண்களுக்கானது என்பதை அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார். ஒலிபெருக்கி முன்பு வந்த பாவனா “நல்ல திரைப்படம் எடுப்பவர்களுக்கும், நல்ல திரைப்படங்களை ரசிப்பவர்க ளுக்கும், லிசாவைப் போல எதிர் நீச்சலிட்டு போராடுபவர்க ளுக்கும் வணக்கம்” என சுருக்கமாக கூறினார். பாவனா தன் நிலையை தெளிவாகசொல்லிவிட்டு இருக்கைக்குத் திரும்பிய போது மீண்டும் அரங்கம் நிறைந்த கரவொலி எழுப்பியது.