சோனியா காந்தி - மு.க.ஸ்டாலின் - சீத்தாராம் யெச்சூரி - து.ராஜா உள்ளிட்ட 13 கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை
புதுதில்லி, ஏப். 17 - அமைதியையும் நல்லிணக்கத்தை யும் பாதுகாக்க இணைந்து பாடுபடு வோம் என்றும், பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்போம் என்றும் குறிப்பிட்டு 13 கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், முன்னாள் முதல் வரும் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா, பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச் சார்யா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலி குட்டி, சிபிஐ(எம்எல்) லிபரேசன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா ஆகிய 13 கட்சித் தலைவர்கள் இணை ந்து ஏப்ரல் 16 (சனிக்கிழமை) கூட்டறி க்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
13 கட்சித் தலைவர்கள் ஒன்றி ணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வருமாறு :- பல்வேறு கட்சித் தலைவர் களாகிய நாங்கள் ஒருங்கிணைந்து கீழ்காணும் வேண்டுகோளை விடு கின்றோம். உணவு, உடை, நம்பிக்கை, திரு விழாக்கள், இவைகளோடு மொழியைப் பயன்படுத்தி நமது சமூகத்தை பிளவு படுத்தும் நடவடிக்கைகளில் ஆளும் வர்க்கத்தினரின் ஒரு பிரிவு ஈடுபட்டு வருவதை மிகுந்த வேதனையுடன் தெரி வித்துக் கொள்கிறோம். அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன், வெறுப் பூட்டும் பேச்சுக்கள் வந்து கொண்டி ருப்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத் தை அளிக்கிறது. அத்துடன் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால் அப்படிப்பட்ட சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது அர்த்தமுள்ள கடுமையான நடவடிக்கைகள் எதையும் எடுக்கா மல் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டி ருப்பது வேதனை அளிக்கிறது.
மதவெறிக் கலவரங்கள்
அண்மையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மதவெறிக் கல வரங்கள் ஏற்பட்டு வருவதற்கு நாங்கள் எங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மேற்காணும் சம்பவங்கள் நடை பெறும் இடங்களில் மக்களிடையே தவ றான எண்ணங்கள் நிலவி வருவதாக வரும் தகவல்களும் எங்களுக்கு வருத்தத் தை அளிக்கிறது. வெறுப்பூட்டும் பிரச்சா ரங்களை மேற்கொள்ள அரசின் ஆதரவு டன் சமூக வலைதலங்கள் பயன்படுத்தப் படுவது மிகுந்த வேதனை அளிப்ப தாகவும், சமுதாயத்தை ஆத்திர மூட்டும் இதுபோன்ற வெறுப்புப் பிரச்சா ரங்களை பார்த்த பிறகும் பிரதமர் மோடி மவுனம் சாதித்து வருவது எங்க ளுக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக வும் உள்ளது.
பிளவை உருவாக்கும் முயற்சி
ஆயுதம் ஏந்திய தனியார் கும்பல் களுக்கு அரசு ஆதரவளிப்பதற்கு பிரதமர் மோடியின் இந்த மவுனமே சாட்சியாக விளங்குகிறது என்றுதான் கூறுத் தோன்றுகிறது. சமூகத்தின் அமைதியை பாதுகாப்பதிலும் விஷம் தோய்ந்த கருத்தியல்களின் மூலம் சமூகத்தில் பிளவை உருவாக்கும் முயற்சிகளை முறியடிப்பதிலும் நாங்கள் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள் ளோம். பலதரப்பட்ட உயரிய கருத்து களை முழுவதுமாக ஏற்று மதிக்கப் பட்டால்தான் நமது நாடு செழிப்பாக இருக்கும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம். சமூகத்தில் கேடு விளைவிப் போரின் முயற்சியை வேரறுத்து, அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அனைத்துத் தரப்பு மக்க ளுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க தன்னிச்சையாகவும் இணைந்தும் செயல்பட வேண்டியதன் அவசியத்தை எங்கள் கட்சிகளின் மாநில அமைப்பு களிடமும் தெரிவித்துள்ளோம். இவ்வாறு 13 கட்சித் தலை வர்களின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.