states

img

வீடுகளில் பாதுகாப்பு இல்லாத பெண்கள் ஹிஜாப் அணியுங்கள்!

பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் திமிர்ப் பேச்சு

போபால், பிப். 18 - வீடுகளில் பாதுகாப்பு இல்லாத பெண்களுக்குதான் ஹிஜாப் தேவை; பொதுவெளியில் ஹிஜாப் அணிவதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சாமியாரிணியும், பாஜக எம்.பி.யுமான பிரக்யா சிங்  தாக்குர் வழக்கம்போல வன்மத்தை  வெளியிட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரக்யா சிங் பேசியுள்ளார். அப்போது அவர்  கூறியிருப்பதாவது: ‘‘வீட்டில் பாதுகாப்பு இல்லாத மக்களுக்கு மட்டும், ஹிஜாப் அணி வது தேவை. பொது இடங்களில் ஹிஜாப் தேவையில்லை. உங் களுக்கு (முஸ்லிம் பெண்களுக்கு) மதராசா உள்ளது. நீங்கள் அங்கு ஹிஜாப் அணிந்தால், அதில் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால், பொது இடங்களில் - வெளியில்- இந்து கோவில்கள்- இருக்கும் இடத்தில், ஹிஜாப் தேவையில்லை. ஹிஜாப் என்பது புர்கா. தீயக் கண்களால் பார்க்கப்படுவதற்கு எதி ராகத்தான் புர்கா பயன்படுத்தப்பட வேண்டும். இந்துக்கள் பெண் களை வணங்குகின்றனர். அவர்கள் பெண்களை மோசமான பார்வை யில் பார்ப்பதில்லை. அதனால் நீங்கள் உங்களை ஹிஜாப் என்ற  திரைபோட்டு மறைக்கத் தேவை யில்லை. பொது  இடங்களில்  முஸ்லிம் பெண்கள்  ஹிஜாப் அணிவதை பொறுத்துக் கொள்ள முடியாது” இவ்வாறு பிரக்யா சிங் தாக்குர் பேசியுள்ளார். “முஸ்லிம் மாணவிகள் ‘முதலில் ஹிஜாப், பிறகு படிப்பு’ என்று வகுப்புகளைப் புறக்கணிப்பதைப் பார்க்கும்போது, அவர்களின் தாத்தாக்கள் பாகிஸ்தானுக்குச் செல்லாமல், எவ்வாறு இந்தி யாவைத் தேர்ந்தெடுத்தார்கள்? என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது” என்று பாஜக மூத்த தலை வர் சுப்பிரமணியசாமியும் தன்பங்கி ற்கு வெறுப்பைக் கக்கியுள்ளார்.