states

img

பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்!

டேராடூன், மார்ச் 23- உத்தரகண்ட்டில் 70 தொகு திகளில் 47 தொகுதிகளை வென்று பாஜக மீண்டும் ஆட்சி யைப் பிடித்தது. எனினும், முதல் வர் புஷ்கர் சிங் தாமி, அவர் போட்டியிட்ட ஹதிமா தொகுதி யில் 6 ஆயிரம் வாக்குகள் வித் தியாசத்தில் காங்கிரஸ் வேட் பாளரிடம் தோற்றுப் போனார். ஆனால், புஷ்கர் சிங் தாமியை யே, மீண்டும் முதல்வராக, பாஜக உறுப்பினரகள் தேர்ந் தெடுத்துள்ளனர். இதையொட்டி புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள் ளார். அதில், என்னை போன்ற ஒரு சாதாரண தொண்டன் மற் றும் ராணுவ வீரரின் மகன் மீதும் நம்பிக்கை வைத்த பிர தமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும்  உத்தரகண்ட் கட்சியின் மத்திய பார்வையாளராக இருந்த ராஜ் நாத் சிங் ஆகியோருக்கும் நன்றி. வெளிப்படையான ஆட் சியை வழங்குவோம். தேர்த லுக்கு முன்பாக மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறு திகளையும் நிறைவேற்று வோம். பொது சிவில் சட்டம் அவற்றுள் முக்கியமான ஒன் றாகும். அதையும் நிறை வேற்றுவோம்” என்று கூறியுள் ளார்.