states

யாருக்கும் அஞ்சாமலும் பாகுபாடின்றியும் தொடர்ந்து செய்திகளை வெளியிடுவோம் : பிபிசி

புதுதில்லி, பிப். 17 - பிபிசி-யின் தில்லி, மும்பை அலுவலகங்களில் 3 நாட்களாக நடை பெற்று வந்த மோடி அரசின் வரு மான வரித்துறை சோதனை, ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 14 அன்று காலை 11.30 மணிக்கு, அலுவலகத்திற்குள் நுழைந்ததுமே அங்கிருந்த ஊழி யர்களின் செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகளை பறிமுதல் செய்தனர். பிபிசி ஊழியர்கள் 10  பேரை வீட்டிற்கு செல்ல விடாமல், 60 மணிநேரமாக அலுவலகத்திலேயே பிடித்து வைத்துக் கொண்டு, அந்த ஊழியர்களின் செல்போன், மடிக்கணினி உட்பட அனைத்து மின்னணு சாதனங்களையும் ஆய்வு நடத்தினர்.  அதனைத் தொடர்ந்து பிபிசி  அலுவலகத்தின் பணப்பரிவர்த்த னைகள் குறித்த மின்னணு மற்றும் காகித ஆவணங்களை அவர்கள் சேகரித்தனர். சர்வதேச வரி விதிப்பு,  துணை நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக விசாரணை நடத்தினர். குறிப்பாக கடந்த 2012- ஆம் ஆண்டு முதலான கணக்கு  வழக்குகள், நிதி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தனர்.  

இந்தியாவின் வருமான வரிச் சட்டத்தின் ‘டிரான்ஸ்பர் பிரைசிங்’ விதிமுறையை ‘பிபிசி இந்தியா’ மீறியிருப்பதாக கூறி, 3 நாட்களாக சுமார் 60 மணிநேரத்திற்கும் மேலாக,  சோதனையைத் தொடர்ந்த வரு மான வரித்துறையினர், பிப்ரவரி 16  பின்னிரவு 11 மணிக்கே இந்த சோத னையை முடித்துக் கொண்டனர். இங்கிலாந்து நாட்டின் அரசுத்துறை செய்தி ஒளிபரப்பு நிறுவனமான ‘பிபிசி’ (British Broadcasting Corporation - BBC), ‘இந்தியா- மோடி என்கிற கேள்வி’ (India: The Modi Question) என்ற தலைப்பில் இரண்டு பாகங்களைக் கொண்ட ஆவணப் படம் ஒன்றை, ஜனவரி 17  மற்றும் 23 தேதிகளில்வெளியிட்டது. கடந்த 2002-ஆம் ஆண்டு குஜ ராத்தில் நரேந்திர மோடி முதல்வ ராக இருந்தபோது இஸ்லாமியர் களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட வன்முறை தொடர்பான இந்த ஆவ ணப்படம், நரேந்திர மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை எழுப்புவதாக இருந்தது. குற்றச்சாட்டுக்கான ஆதாரங் களையும் வெளியிட்டது.

இந்தப் பின்னணியிலேயே, மோடி அரசின் வருமான வரித்துறை, கடந்த  பிப்ரவரி 14 அன்று காலை 11.30 மணிக்கு, பிபிசி-யின் தில்லி, மும்பை அலுவலகங்களுக்குள் புகுந்தது. விசாரணை முடிவில் பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றிச் சென்றுள்ளது. இந்நிலையில், பிபிசி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள் ளது. அதில், “தில்லி மற்றும் மும்பை யில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இருந்து வருமான வரித்துறை அதி காரிகள் புறப்பட்டுச் சென்றுவிட்ட னர். அதிகாரிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கு வோம். இந்த விவகாரம் மிக விரை வில் முடிவுக்கு வரும் என நம்பு கிறோம்” என்று தெரிவித்துள்ளது. மேலும், “மூன்று நாள் ஆய்வின் போது நீண்ட நேர கேள்விகளால் சில பணியாளா்கள் இரவும் பகலும் அலுவலகத்தில் தங்கியிருக்க நேரிட் டது” என்றும், வழக்கம்போல “யாரு க்கும் அஞ்சாமலும், யாருக்கும் ஆதரவு இல்லாமலும் தொடா்ந்து செய்திகள் வழங்கப்படும்” என்றும் அறிவித்துள்ளது. இது, நாடு முழுவதும் நரேந்திர  மோடி தலைமையிலான ஆளும் பாஜக அரசுக்கு எதிரான விவாதங் களை கிளப்பியதை அடுத்து, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021-இன் விதி 16- வழங்கும் அவசர கால தணிக்கை அதிகாரங்களைப் பயன்படுத்தி, பிபிசி ஆவணப் படத்திற்கு வேகவேகமாக தடை விதித்தது. அத்துடன் மோடி அரசின் வருமான வரித்துறையும், கடந்த பிப்ரவரி 14 அன்று காலை 11.30 மணிக்கு, பிபிசி-யின் தில்லி, மும்பை அலுவலகங்களுக்குள் புகுந்தது. தற் போது பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றுள்ளது.