ஹரித்துவார் மாநாட்டில் இந்துத்துவா கும்பலின் கொலைவெறி
ஹரித்வார், டிச. 24 - உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில், பல்வேறு இந்துத்துவா அமைப்புக்கள் கூடி “தர்ம நாடாளுமன்றம்” (‘Dharma Sansad’) என்ற பெயரில், கடந்த டிசம்பர் 17 முதல் 19 வரை மூன்று நாட்களுக்கு மாநாடு ஒன்றை நடத்தினர். ஹிந்து சாமியாரான யதி நரசிங்கானந்த் ஏற்பாடு செய்திருந்த தர்ம நாடாளுமன்றத்தில், ‘ஹிந்து ரக்ஷ சேனா’ அமைப்பைச் சேர்ந்த பிரபோதானந்த் கிரி, உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ராஜேஷ், பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாயா, பாஜக மகளிர் அணி தலைவி உதித்தா தியாகி உள்ளிட்ட பலர்பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசியவர்கள், இஸ்லா மியர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவிப்போம்; இந்தியாவை இந்து நாடாக மாற்று வோம் என்று பகிரங்கமாக கொலைவெறியைத் தூண்டியது தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநாட்டை ஏற்பாடு செய்த நரசிங்கா னந்த் பேசுகையில், “2029-ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக ஒரு இஸ்லாமியர்’’ வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது தான் இந்த மாநாட்டின் கருப்பொருள். இந்துக் களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த, 7-8 ஆண்டுகளில் சாலை களில் நாம் பார்க்கக்கூடிய மனிதர்களெல்லாம் இஸ்லாமியராகத்தான் இருக்கமுடியும் 2029-ஆம் ஆண்டில் இஸ்லாமியர் ஒருவர் நாட்டின் பிரதமரானால் என்ன நடக்கும்? இஸ்லாத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இதற்கு பதில் கிடைக்கும். நாட்டைக் கைப்பற்றிய 20 ஆண்டுகளில் 50 சதவிகிதம் இந்துக்கள் மதம் மாற்றப்படுவார்கள்,
40 சத விகிதம் இந்துக்கள் கொலை செய்யப்படு வார்கள். எஞ்சிய 10 சதவிகிதம் பேரும் அமெரிக்கா, கனடா, லண்டன், ஐரோப்பா அல்லது இந்தியாவில் உள்ள ஐநா அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். மடங்கள் இருக்காது, கோவில்கள் இருக்காது. தாய்மார்களும், சகோதரிகளும் பாலியல் வல்லுறவுக்காக சந்தையில் விற்கப்படுவார்கள். எனவே, இந்துமதத்தைக் காக்க விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் போன்ற ஒருவர் இந்துமதத்திற்கு வேண்டும். ஒவ்வொரு இந்துவும், பிரபாகரனாக, காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பிந்தர ன்வாலேவாக மாற வேண்டும். நமக்கு கத்தி போதாது, அதை விட நவீனமான ஆயுதங்கள் வேண்டும். பிரபாகரன், பிந்தரன் வாலே போல ஒருவர் மாறுவற்கு முன்வந்தால் அவ ருக்கு நான் ஒரு கோடி ரூபாய் பணம் வழங்கு வதோடு தொடர்ந்து 100 கோடி ரூபாய் நிதியும் திரட்டித் தருவேன்” என்று பேசி யுள்ளார். மேலும், “இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கும், இந்துக்களுக்கு மட்டுமான நாடாக உருவாக்குவதற்கும் சண்டையிடு வோம்.
செத்துமடிவோம். தேவைப்பட்டால் கொலையும் செய்வோம். எதற்காகவும் அஞ்ச மாட்டோம். எந்த தியாகத்தையும் செய்யவும் தயங்க மாட்டோம்” என்ற உறுதிமொழி ஒன்றை வாசித்து, அதனை மாநாட்டிற்கு வந்த அனைவரையும் ஏற்க வைத்துள்ளார். இந்துமகாசபை பொதுச் செயலாளரான பூஜா ஷகுண் பாண்டே என்ற மாதா அன்னபூர்ணா பேசுகையில், “முஸ்லிம்களை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களைக் கொல்ல வேண்டும். 100 வீரர்கள் கிடைத்தால் போதும் 20 லட்சம் பேரைக் கொன்று குவிக்க லாம்” என்று கணக்குப் போட்டுள்ளார். மற்றொரு நபரான ஆனந்த் ஸ்வரூப் மகாராஜ், “இந்து தேசம் அமையாவிட்டால் 1857-இல் நடந்தது போல் கலகம் வெடிக்கும்” என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார். “இந்த ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் குறிப்பாக ஹரித்வாரில் உள்ள ஹோட்டல்கள் உள்ளிட்ட எந்த பொதுஇடத்திலும் யாரும் கிறிஸ்துமஸ் அல்லது ரம்ஜான் பண்டிகையை கொண்டாட விடக்கூடாது” என்றும் கூறியுள்ளார். இந்து ரக்ஷா சேவா அமைப்பைச் சேர்ந்த பிரபோதானந்த் கிரி பேசுகையில், “மியான்ம ரில் நடந்ததைப் போன்ற இன அழிப்பில் நாம் ஈடுபட வேண்டும். காவல்துறை, ராணுவம், அரசியல் பதவிகளில் உள்ள இந்துக்கள் தங்கள் கையில் ஆயுதங்களை எடுக்க வேண்டும். இன அழிப்பில் ஈடுபட வேண்டும்.
இதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை” என்று தூபம் போட்டுள்ளார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தர்மதாஸ் மகாராஜ் என்பவர் பேசுகையில், “இஸ்லா மியர்களுக்கு ஆதரவான சட்டத்தை மன்மோகன் சிங் கொண்டுவந்த போது நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருந் தால், நாதுராம் கோட்சே செய்த வேலையை செய்திருப்பேன், ஆறு குண்டுகளையும் பிரயோ கித்திருப்பேன்” என்று பயமுறுத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இந்தப் பேச்சுக்களுக்கு பல்வேறு தரப்பி லிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. முன்னாள் ராணுவத் தளபதி, சமூக செயற்பா ட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பல ரும் கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையுமான மார்டினா நவரத்திலோவா-வும் இந்த வீடியோக்களுக்கு தனது அதிர்ச்சியைத் தெரிவித்ததைத் தொட ர்ந்து, இந்த விவகாரம் சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து, உத்தரகண்ட் பாஜக அரசின் காவல்துறை, மாநாடு முடிந்து 4 நாட் களுக்குப் பிறகு, சம்பிரதாயமாக ஒரே ஒரு வர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. கொலை வெறியைத் தூண்டிய நரசிங்கானந்த், பூஜா ஷகுண் பாண்டே, ஆனந்த் ஸ்வரூப் மகாராஜ், பிரபோதானந்த் கிரி, தர்மதாஸ் மகாராஜ் போன்றோரை விட்டு விட்டு, வாசிம் ரிஸ்வி எனப்படும் ஜிதேந்தர் நாராயண் தியாகியை பலி கடா ஆக்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஷியா வக்பு வாரியத் தலைவராக இருந்த வாசிம் ரிஸ்வி, கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இஸ்லாம் மதத்திலிருந்து விலகி இந்துவாக மதம் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.