புதுதில்லி, ஏப்.17- 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வருகின்ற 4 நாட்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநி லங்களில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வரை வெப்ப அலை நிலவும். இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 18 வரை தற்போதைய வெப்ப அலை தொடர வாய்ப்பு உள்ளது. உத்தரப்பிரதேசம், மகா ராஷ்டிரா, மேற்கு வங்கம் மற் றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வரும் 20 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு வெப்ப அலை தொடரும். வட மாநி லங்களில் வரும் நாட்களில் இயல்பை விடவும் 3 -5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வரும் 5 நாட்களுக்கு வடகிழக்கு மாநி லங்களான அருணாச்சல பிர தேசம், அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோ ரம் மற்றும் திரிபுரா மாநிலங்க ளில் மழைக்கு வாய்ப்புள் ளது. அதைப்போலவே ஆந் திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரியின் சில பகுதிகளிலும் வரும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.