நிர்வாகச் சீர்கேடும், பொதுவான பக்தர்களின் நலனில் கவனம் செலுத்தாமல் விஐபி-க்கள் மீது மட்டும் கவனம் செலுத்தியதே கும்பமேளா துயரச் சம்பவத்துக்குக் காரணம். மகா கும்பமேளா நிறைவு பெற இன்னும் நிறைய காலம் இருக்கிறது. எனவே விஐபி கலாச்சாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பொது பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் சிறந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
விஐபிகளுக்கு முன்னுரிமை அளித்து பொது பக்தர்களுக்கு போதுமான ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதே கும்பமேளா விபத்திற்கு காரணம். கும்பமேளாவின் நிர்வாகத்தை இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இவ்வளவு பெரிய சோகம் நடந்திருக்காது.
உத்தரப்பிரதேச கும்பமேளாவில் பலர் நெரிசலில் உயிரிழந்திருக்கின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வில் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுப்பது சுலபமில்லைதான் என்றாலும் விஐபிகளுக்கு இருக்கும் வசதி வாய்ப்புகளும் சலுகைகளும் ஒரு சாமானியனுக்கும் கிடைக்க வேண்டிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
பிரிந்தால் பிளவுபடுவோம் என்ற சித்தாந்தத்துடன் இருக்கும் பாஜகவில் நான் இருக்க விரும்பவில்லை, ஒன்றாக இருந்தால் பலமாக இருப்போம் என்ற சித்தாந்தத்துடன் இருக்கும் எதிர்க்கட்சியில் சேரப்போகிறேன்.